Showing posts with label Drama. Show all posts
Showing posts with label Drama. Show all posts

Sunday, 25 January 2026

“Days at the Morisaki Bookshop” by Satoshi Yagisawa (Translator - Eric Ozawa)

Takaka’s life is in disarray after an abrupt end to her relationship, when her boyfriend betrays her to marry someone else. When she is reluctant to face the harsh reality of her situation, she is forced to stay at her uncle Satoru’s cozy little bookshop. Though she is not quite convinced about the idea, she decides to go, only to realise that it was the best decision she ever made.

After sleeping off her initial days at the bookshop locking herself into her room and reeling over her past, she is pulled out by her uncle for a walk in the neighbourhood which starts off her journey towards self-realisation. A simple life over books and coffee, the close-knit neighbourhood, contended life of the people and above all the teetering pile of books around her help her on her gradual transformation. The power of books to teleport oneself and escape from the harsh reality heals Takaka.


The novel presents before us Takaka’s emotional journey through betrayal, heartbreak, healing and self-discovery in the first part. However, the second part shifts its focus to Satoru’s estranged wife Momoko which serves as a distraction to an otherwise breezy novel.


Despite the shortcomings in the latter half, the ambience the novel paints before us about the bookstore and the neighbourhood is one world every avid book reader will wish to be part of. 

Wednesday, 18 December 2024

விட்டல் ராவின் "வண்ண முகங்கள்"


விட்டல் ராவின் "வண்ண முகங்கள்" நாடகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய நாவல். ஒரு நாடக கம்பெனியின் வீழ்ச்சியையும், அதை மீட்டெடுக்க முயற்சிக்கும் வாழ்வியல் இழந்த தொழிளாலர்களின் கதையையும் உண்மைக்கு நெருக்கமாக சித்தரிக்கிறது இந்நாவல். நாடக கம்பெனிகளுக்கிடையே நிலவும் போட்டியையும், மக்களை தங்கள் நாடகங்களுக்கு வரவழைக்க கையாளும் யுக்திகளையும் விட்டல் ராவ் விவரிக்கிறார்.   


நடிகர்கள், அரங்கம் அமைக்கும் பணியாளர்கள், ட்ராலி ஆப்பரேட்டர்கள், ஒப்பனையாளர்கள் ஆகியோரின் நிலையற்ற வாழ்வை, பொருளாதார நிலையை பிரதிபலிக்கிறது இந்நாவல். ஊர் ஊராய் அலையும் நாடக கம்பெனிக்காரர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை பற்றி கூட முடிவெடுக்க முடியாத சூழலில் இதர வேலைகளை தேட முற்படுகின்றனர். நாடக கம்பெனி முதலாளியாக கடனில் தத்தளிக்கும் நிலையிலும் நாடகங்களை விடாமல் இறுதி வரை பற்றிக்கொள்ளும் கிருஷ்ணப்பாவின் பிடிவாதம் ஒரு கலைஞன் தன் கலை மீது வைத்திருக்கும் பற்றை உணர்வுபூர்வமாக பேசுகிறது.

நாடக கம்பெனி நாடகம் நடத்த ஊரை தேர்ந்தெடுத்தல், நாடக மேடை அமைப்பு முறை, இடம்பெயர்ந்து செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகள், பெனிஃபிட் ஷோ நடத்தும் முறை என பலவற்றை இந்நாவல் காட்சிப்படுத்தி நமக்கு நாடக உலகத்தையும், அதன் திரையின் பின்னால் இருக்கும் உழைப்பையும் அறிமுகப்படுத்துகிறது. 

நாடக நடிகர்களின் சினிமா கனவையும், வெள்ளித்திரையின் மோகத்தால் நலிவடையும் நாடக சபாக்களைப் பற்றிய ஆதங்கமும் நாவல் நெடுக ஒலிக்கிறது. சில சமயங்களில் நாடகக் குழுவிலிருக்கும் ஒரே ஒரு நபரின் எதிர்மறையான முடிவு மொத்த கம்பெனியின் மேல் உண்டாக்கும் தாக்கத்தை காட்சிப்படுத்தி எவ்வளவு நிச்சயமற்ற வாழ்வை நாடக சபாக்களில் பணிபுரிவோர் கொண்டுள்ளனர் என விவரிக்கிறார் விட்டல் ராவ்.


நாடக நடிகர்களின் மகிழ்ச்சியையும், காதலையும், கனவுகளையும், துயரங்களையும், அவர்கள் சந்திக்கும் துரோகங்களையும் பேசும் இந்நாவல் எங்குமே melodramatic ஆக மாறாமல் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கிறது.

Saturday, 14 September 2024

ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்"

ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" ஆண்-பெண் உறவையும், திருமணம் எனும் உறவுமுறை அமைப்பின் கட்டுப்பாடுகளையும், அதனால் ஏற்படும் விரிசல்களையும் பேசுகிறது. இந்த உறவுமுறையில் பெண் தன்னிச்சையாகவும் practical ஆகவும் இருந்து, அதே சமயம் ஆண் வழக்கமான எதிர்பார்ப்புகளுடன் இருந்தால் என்னவாகும்? இந்த ஒரு சூழலை மையமாகக் கொண்டு ஆண்-பெண் உறவில் உளவியல் ரீதியான சிக்கல்களையும், எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்தையும் நுட்பமாக வெளிப்படுத்துகிறது இந்நாவல்.




நாடக நடிகை கல்யாணியும், நாடக விமர்சனம் எழுதும் ரங்காவும் ஒரு அமளியின் நடுவே சந்திக்கின்றனர். பார்த்த மாத்திரத்தில் இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சந்திக்க காரணம் தேடுகின்றனர். பின்னர் காதல் கொள்கிறார்கள். கல்யாணிக்குப் பாதுகாவலராகவும், அவள் நலனில் அக்கறை கொண்டவருமாக இருக்கும் அண்ணாசாமி கல்யாணி-ரங்கா இருவரும் கல்யாணம் செய்ய யோசனை கூறுகிறார். ரங்காவும் சம்மதிக்கிறான். 

Jeyakanthan


கல்யாணிக்கு ஒரு சொந்த வீடு இருந்தும், திருமணத்திற்கு பிறகு இருவரும் ரங்காவின் வருமானத்திற்கேற்ப ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார்கள். இந்த பொருளாதார வேறுபாட்டிலினால் எந்த சச்சரவும் வரவில்லை எனினும் இருவரின் இயல்பும் எதிரெதிராக இருப்பதை ரங்கா உணர்கிறான். அவன் எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. ஒரு கட்டத்தில் அவள் இவனுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராய் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறான். அவளுக்கு உயிரான நாடகத்தையும் துறக்க வேண்டும் என்று நினைக்கிறான். கல்யாணியோ அவனிடம் எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அன்பு கொள்கிறாள் - மனைவி என்ற அங்கீகாரம் உட்பட. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய சம உரிமையை எளிதாக எடுத்துக்கொள்கிறாள். இந்த contrasting இயல்புகளே இவர்களின் பிரிவுக்கு காரணமாகின்றன. 

அந்த பிரிவு இருவர் மீதும் என்னன்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மீதி கதை. கல்யாணி-ரங்கா இருவருக்கிடையே ஏற்படும் ஈர்ப்புக்கான justification சரிவர இல்லை. தங்கள் திருமண நிலையை பற்றி இருவரின் உரையாடல்கள் நீண்டு கொண்டே போவதும், ஆங்காங்கே repetition ஆவதும் தொய்வு. எனினும் இந்நாவல் மனித இயல்பின் எதார்த்தத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. 

Wednesday, 10 July 2024

அறிஞர் அண்ணாவின் "நீதிதேவன் மயக்கம்"

அறிஞர் அண்ணாவின் நாடகங்களில் ஒன்றான "நீதிதேவன் மயக்கம்" இராமாயண காவியத்தில் "இராவணன் ஒரு இரக்கமற்ற அரக்கன்" என்ற கம்பரின் தீர்ப்பை சீராய்வு செய்ய கடவுள் நீதிதேவனுக்கு கட்டளையிடுவதாக ஆரம்பமாகிறது. இந்த கற்பனைக் களத்தில் பயணிக்கும் இந்த நாடகம் திராவிட இயக்கத்தின் கருத்தியலை மிக நுட்பமாக பேசுகிறது. 

நீதிதேவனின் அறமன்றத்தில் இராவணன் தன் தரப்பு வாதத்தை தானே எடுத்துரைக்கிறான். இராமாயணத்தின் கதை மாந்தர்கள் இரக்கமற்ற முறையில் நடந்துகொள்ளும் தருணங்களை விவரிக்கிறான். கம்பரின் தீர்ப்பில் இருக்கும் பாரபட்சத்தையும், இராமாயணம் உயர்த்திப்பிடிக்கும் பாகுபாட்டையும் உள்ளது உள்ளபடி சுட்டிக்காட்டுகிறான். பெரிய புராணத்தில் வரும் சிறுதொண்டர் கதையிலும், கோட்புலி நாயனார் கதையிலும் நடக்கும் கொடூரச் சம்பவங்களை விவரித்து கடவுள் மற்றும் ரிஷிகளின் இரக்கமற்ற செயல்களை எடுத்துக்காட்டி வாதிடுகிறான். மறுமுனையில் கம்பரிடம் இருந்து வரும் எதிர் வாதங்களுக்கும் தக்க பதிலளிக்கிறான். 

பூலோகத்திலும், மேலோகத்திலும் நடக்கும் இரக்கமற்ற செயல்களில் இரண்டு உலகங்களின் மனிதர்கள், ரிஷிகள், காப்பியக் கதைமாந்தர்கள், கடவுள்கள் ஆகியோரின் பங்கை எடுத்துக்காட்டும் இராவணின் வாதத்தைக் கேட்டு நீதிதேவன் மயங்கி விழுவதாக நாடகம் முடிவடைகிறது. இந்நாடகத்தில் வரும் வசனங்களும், காட்சிகளும் புராணக் கதைகளை நம் கண்முன் நிறுத்துகின்றன. ஆங்காங்கே வரும் சில வசனங்கள் திரும்பத் திரும்ப இடம்பெறுவதால் காடசியின் ஓட்டத்தில் தொய்வு ஏற்படுகிறது. 


அறிஞர் அண்ணாவின் அரசியலை பேசும் நாடகம் இது. இந்திய அரசியலில் இராமாயணம் மற்றும் ஆரியத்தின் தாக்கம் இன்றளவும் இருக்கும் பட்சத்தில், இராவணன் தனது பக்க நியாயத்தை வாதிடுவதாக காட்சி அமைத்தது அண்ணாவின் இயக்கம் ஆரியத்திற்கு நேரெதிராக முன்வைக்கும் கருத்தியலின் அடையாள அரசியல். இராவணனை நாயகனாக அடையாளப்படுத்தும் யுக்தி “anarchism” பேசும் பல அறிஞர்கள் கையாண்ட யுக்தி. அதன் வழி புராணங்களும், காப்பியங்களும் கட்டமைக்கும் தூய்மை எனும் பிம்பத்தை பல இடங்களில் உடைத்தெரிகிறது இந்நாடகம்.

Monday, 15 January 2024

“The Lost Bookshop” by Evie Woods

“The Lost Bookshop” by Evie Woods is a story that has elements of romance, historical fiction, mystery and magical realism. 

The story revolves around three central characters - Opaline, Martha and Henry. Opaline, a woman from the 1920s who flees home to escape a forced marriage and a domineering older brother finally ends up as the owner of an antiques and books shop in Dublin. Martha, a woman from the present who escapes from an abusive marriage lives as a servant to a wealthy lady with a constant fear of her husband finding her. Henry, a researcher with a traumatic childhood is in pursuit of a rumoured manuscript of Emily Brontë’s second novel. 

Evie Woods
Evie Woods
The non-linear narrative of the novel travels around these three characters in two different timelines. The journey of these three characters to overcome their distressing past to a better future with surprising yet welcoming turn of events forms the storyline. 



The lives of these three are seamlessly interwoven in this magical tale of love, betrayal, hope, self-realisation and destiny. The novel brings in historical references to books, bookshops, authors and their personal lives and combines this reality with otherworldly elements to build a compelling tale of magical realism. Except being slow paced at some places, this is a feel-good novel which is engaging for the most part. 

Tuesday, 11 July 2023

அசோகமித்திரனின் "மானசரோவர்"

அசோகமித்திரனின் "மானசரோவர்" எனும் நாவல் கோபால், சத்யன் குமார் என இரு வேறு மனிதர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு பயணிக்கிறது. அவர்கள் இருவரின் மொழி வேறு, மதம் வேறு, பொருளாதார நிலை வேறு, அவர்கள் வாழும் நிலப்பரப்பு வேறு, குடும்ப சூழல் வேறு - அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமை சினிமா துறையில் வேலை என்பதே. தொழில் ரீதியாக அறிமுகமாகும் இவர்கள் நண்பர்களாகின்றனர். அதன் பின்னர் அவர்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்விலும், தொழில்முறை வாழ்விலும் இந்த நட்பின் தாக்கம் தொடர்கிறது. 



இவ்விறு கதாப்பாத்திரங்களின் வாழ்வை மாற்றி அமைக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அவற்றிலிருந்து மீளவும், தீர்வு காணவும் அவர்கள் ஆற்றும் எதிர்வினைகளும், எடுக்கும் முடிவுகளும் மனித இயல்பின் எல்லைக்குட்பட்டதாக இக்கதையில் அமைகின்றன. வாழ்வில் எதிர்படும் விளங்க முடியாத புதிர்களுக்கு விடைகளை பகுத்தறிவால் அடைய முற்பட்டு இயலாமல், கடைசியாக ஆன்மீகத்தால் அடைய விரும்பும் பெரும்பான்மை மக்களின் பிரதிபலிப்பாக இவ்விறு கதாப்பாத்திரங்கள் அமைகின்றன. கதையின் இறுதியில் கோபால், சத்யன் குமார் இடையே நடக்கும் உரையாடலில் அவர்களின் தேடல் முடிவடைகிறது. 

கதையில் வரும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும், அதன் விளைவாக இசுலாமிய மக்களின் நிலையும் மேம்போக்காக சொல்லப்பட்டாலும், குடும்பத்தைப் பிரிந்த ஒரு முஸ்லீமின் உளவியல் பாதிப்புகள் நுட்பமாக விவரிக்க படுகின்றன. சினிமா தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிச்சயமற்ற வாழ்வும் இக்கதையில் பேசப்படுகிறது. 

ஆங்காங்கே சிறிது செயற்கை தன்மை தென்பட்டாலும், அசோகமித்திரனின் கதை சொல்லும் விதம் இந்நாவலை உயிர்ப்புடன் நகர்த்தி செல்கிறது. 

Monday, 26 June 2023

ஜி. நாகராஜனின் "குறத்தி முடுக்கு"

ஜி. நாகராஜனின் "குறத்தி முடுக்கு" பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களைப் பற்றிய குறுநாவல். குறத்தி முடுக்கு எனும் கற்பனையாக உருவாக்கப்பட்ட விலைமாதர் தெருவில், விலைமாதரின் வாழ்வை உணர்வுபூர்வமாக சொல்கிறது இந்நாவல். செயற்கையாக இருட்டடிக்கப்பட்ட சாலையாக குறத்தி முடுக்கின் அறிமுகத்தில் துவங்கி, காவல் நிலையத்தில் விலைமாதர் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறை வரை மிக நுட்பமான வர்ணனை இந்நாவலில் இடம்பெறுகிறது.



நாவலின் பெண் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின்கதை அமைகிறது. எந்த ஒரு கதாப்பாத்திரத்தின் மீதும் தன் கருத்தை திணிக்க முற்படாமல், அவர்களின் செயல்களை மதிப்பிடாமல், அவர்களின் இயல்பையும் அனுபவங்களையும் மட்டும் பேசுகிறது இந்நாவல். இப்பெண்களின் வாழ்வில் காதலுக்கும் இடமுண்டு, வாழ்க்கை முழுவதும் உறவில்லாமல் வாடி ஒரு குழந்தைக்காக ஆசைப்படும் ஏக்கத்துக்கும் இடமுண்டு என நமக்கு அவர்களின் உலகத்தை அறிமுகம் செய்கிறார் ஜி. நாகராஜன்.

நம் சமூகத்தின் பார்வையில் பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணின் மீது சுமத்தப்படும் கண்ணியமற்றவள் எனும் பிம்பம், கற்பை பெண்களுக்கு மட்டும் உரித்தாக்கும் நிர்பந்த கற்பு முறையின் விளைவே. கற்பை புனிதப்படுத்தும் சமூகத்தின் பார்வையிலிருந்து விலகி, பாலியல் தொழிலை மற்றுமொரு தொழிலாக பார்க்கும் மனநிலையை இந்நாவல் கொடுக்கும். 

Friday, 23 June 2023

Sidney Sheldon's "The Sands of Time"

Sidney Sheldon's "The Sands of Time" is an action adventure novel that revolves around four nuns who escape a military assault on a Christian convent and are forced to face the challenges of the outside world which they had once renounced. 

The four nuns Megan, Lucia, Graciela and Teresa are being chased by the military after their escape and they are forced to travel with the rebels who are branded terrorists by the Spanish government. Jaime Miro, the most wanted rebel known for his exploits to keep the military and police at bay is burdened with the responsibility of escorting the nuns to a safe place. The nuns reinvent themselves on this journey through the hills and forests with the tension of military closing in on them - a journey where they have to adapt and survive. 


Each one of the nuns have a terrible past and they cocoon themselves into the church as their last resort and escape from the harsh reality of their present lives. With that environment changed now, they fight back their inner fears and their nightmares of the past to adapt to the changed world. The backstories of the nuns are slightly disturbing which justifies their actions but at times obscene which could have been avoided with no impact to the storyline. 

The political situation in Spain where Basques were fighting against Spanish nationalists for self-governance or complete independence to preserve their identity forms the backdrop of this novel and is convincingly interwoven into the storyline. But, the lives of rebels and them giving in to personal desires and urges depicted here is questionable. The lives of nuns inside the Christian institutions and how they are asked to suppress their desires and feelings in the name of service to God depicted here is close to reality.

The novel builds up a tale of bravery, betrayal and survival in a steady pace to keep the readers engaged. There is enough drama to propel the novel to a climactic end. The closure Sidney gives to the characters stay true to the storyline and the character sketches instead of pulling off an unprecedented end just to pique the reader’s interest.

Barring the obscenity and some unnecessary romantic sequences, the novel still is a good read. 

Sunday, 18 December 2022

பட்டுக்கோட்டை பிரபாகரின் "கண்டுபிடியுங்கள்"

பட்டுக்கோட்டை பிரபாகரின் "கண்டுபிடியுங்கள்"  அவரது குறுநாவல்கள் சிலவற்றின் தொகுப்பு.


கண்டுபிடியுங்கள்
காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு ஒரு துப்பறியும் நிறுவனத்தை நாடுகிறார் நகைக் கடை உரிமையாளர் ஒருவர். கடத்தலா? கொலையா? காதலால் வீட்டை விட்டு ஓட்டமா? என்று அப்பெண் மாயமானதன் மர்மம் கதையை உயிர்ப்புடன் நகர்த்துகிறது. இடையிடையே வரும் கதாப்பாத்திரஙகளின் மர்மமான நடவடிக்கைகளும், அவர்கள் மீது எழும் சந்தேகங்களும் “suspense thriller”-களுக்கான template. முடிவில் வரும் திருப்பம் எதிர்பாராதது எனினும், அது வாசகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெறலாம். 

தயவு செய்து
நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நடுரோட்டில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறாள். அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த குடும்பத்தின் எதிர்வினையும், அதனால் வரும் நெருக்கடியும், அதிகாரமும் பணபலமும் அவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும் உரையாடல்கள் மூலம் கதையில் சொல்லப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பயம், அதன் விளைவாய் அவள் தந்தை அந்த சூழ்நிலைக்கு தேடும் தீர்வுகளும் சமூக எதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. ஆனால் அந்த எதார்த்தம் சரி தானா என கேள்வி எழுகிறது.


டேக் நம்பர் 2
விறுவிறுப்பான suspense நிறைந்த thriller கதை இது. சின்ன சந்தர்ப்பம் அமைந்தாலும் பணத்தை கரக்க பிசிரில்லாமல் திட்டம் போட்டு மோசடி செய்யும் மனிதர்கள் நிறைந்த உலகமே இந்த கதையின் களம். கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களாலும், அடுத்தடுத்து வரும் உச்சக்கட்டக் காட்சிகளாலும் கதையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. Template ஆன ஆட்கடத்தல் கதையாக ஆரம்பித்தாலும், அதை தொடர்ந்து வரும் சம்பவங்கள் இக்கதையை cliche என்று சொல்ல முடியாதபடி காப்பாற்றுகின்றன.


சந்திரன் சாட்சியாக
பெண்கள் வேலைக்கு செல்லுமிடத்தில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல்களை பலர் மௌனத்துடன் கடந்து செல்வர். ஆனால் சிலர் அதை எதிர்க்க நினைக்கும் போது அவர்களுக்கு வரும் சிக்கல்கள், அவர்களை பற்றிய சமூகத்தின் கண்ணோட்டம், சட்ட ரீதியான சாட்சியங்கள் ஆகியவை பெரும்பாலும் அவர்களை பலவீனப்படுத்துகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கும் ஒரு பெண்ணிண் கதை இது. மேம்போக்காக இந்த பிரச்சினையை அணுகி, கதையின் ஓட்டத்துக்காக commercial elements-ஐ புகுத்தி, நம்பகத்தன்மை சிறிதும் இல்லாத climax-ல் முடிகிறது இக்கதை. 

புதிய குதிரை-7-710
நகைக் கடைக் கொள்ளை - பணயமாக ஒரு பெண் ஊழியர் - கொள்ளையர்களை தேடும் அதிகாரி - வழக்கமான thriller கதை. கதை எந்த தருணத்திலும் உச்சக்கட்டத்தை அடையாமல் flat ஆக பயணிக்கிறது. விறுவிறுப்பாக அமைய கதையின் அமைப்பும், கதையின் போக்கும் கைக்கொடுக்கவில்லை. 

மதிப்புக்குரிய ரகசியம்
ஒரு decent conspiracy thriller ஆக துவங்கும் இக்கதை, அதன் பின் வழக்கமான thriller கதைகளுக்கான வரம்புக்குள் சிக்கிக் கொள்கிறது. Conspiracy பிரதானமாக இல்லாமல், அதை தடுப்பதற்காக கையாளப்படும் யுக்திகளை மட்டும் நம்பி பயணிக்கிறது. நல்ல conspiracy thriller கதைக்கான அமசங்கள் அமைந்தாலும், predictable ஆக நகர்ந்து தோற்கிறது இக்கதை.

... ஆகையால் இறந்தாள்
ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். காவல்துறை விசாரணையில் முன்னாள் காதலன், கள்ளக் காதலன் உட்பட நான்கு பேரின்பால் சந்தேகம் வருகிறது. இந்த மர்மத்தை சுற்றி கட்டமைக்கப்படும் வழக்கமான whodunit கதை Predictable climax-ல் முடிகிறது. 

மிஸ் வந்தனாவின் வாக்குமூலம் 
காதலர்கள் இருவர் வீட்டில் சம்மதம் பெற முடியாமல் ஊரைவிட்டு ஓடிப் போகின்றனர். இருவருக்கும் அங்கே காத்திருக்கும் முடிவுகளும், எதிர்பாராத  திருப்பங்களும் இக்கதையை பரபரப்பு குறையாமல் நகர்த்தி செல்கின்றன. Epilogue-ல் வரும் climax இக்கதையை Decent thriller ஆக நிறைவு செய்கிறது.

நடுவில் ஒரு நங்கை
பார்த்தவுடன் காதலில் ஆரம்பித்து முக்கோண காதல் கதையாய் மாறி பழிவாங்கும் படலத்தில் முடிகிறது இந்த கதை. மற்றுமொரு சுமாரான treatment கொண்ட கதை. 

Murder mystery, Family drama, Suspense thriller என கமர்ஷியல் கலவையாய் அமைகிறது இந்த தொகுப்பு. விமர்சனங்கள் பல இன்று இருந்தாலும், இக்கதைகள் எழுதப்பட்ட காலத்தில் வெகுஜன ஏற்பை பெற்றிருக்கலாம். மொத்தத்தில் வாசகர்களுக்கான "timepass entertainment” தந்து வெகு மக்களிடம் சென்றடையும் "pulp fiction" கதைகளின் தொகுப்பு இது. 

Saturday, 15 May 2021

இந்திரா பார்த்தசாரதியின் "குருதிப்புனல்"



குருதிப்புனல் - ஒரு மனிதன் தன் இயலாமையை இகழும் சமுதாயத்தின் மீது கொண்ட வஞ்சம், தனிமனிதத் தாக்குதல்களால் உண்டாகும் பழி வாங்கும் உணர்வு என்று தனிப்பட்ட பிரச்சனையை மட்டுமே முதல்நிலைப் படுத்துகிறது இந்நாவல்.

ஆனால் கிராமங்களின் சமூக சூழல், அங்கு நிலவும் சாதியக் கட்டமைப்பு, விவசாயிகளின் பொருளாதார நிலை - அதனை நிர்ணயிக்கும் மிராசுதாரர்களின் அதிகார பலம், அதன் விளைவாய் எழும் எழுச்சி ஆகியவை பின்னணியில் தள்ளப்படுகின்றன. நாவலின் நிகழ்வுகள் எல்லாம் கிராமப்புறங்களில் அன்றாடம் நடக்கும் சாதி ரீதியான தாக்குதல்களே. அதை தனிமனிதப் பகையாய் சித்தரிப்பது ஏமாற்றமே.

மொழிநடையில் மிளிரும் இந்நாவல், நடைமுறையில் நிகழும் சமூக அவலங்களின் காரணத்தை, அதனால் எழும் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்கிறது.





“Lightning” by Dean Koontz

On a night marked by a freak lightning storm, a mysterious blond stranger intervenes at Laura Shane’s birth, preventing an inebriated doctor...