Saturday, 14 September 2024

ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்"

ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" ஆண்-பெண் உறவையும், திருமணம் எனும் உறவுமுறை அமைப்பின் கட்டுப்பாடுகளையும், அதனால் ஏற்படும் விரிசல்களையும் பேசுகிறது. இந்த உறவுமுறையில் பெண் தன்னிச்சையாகவும் practical ஆகவும் இருந்து, அதே சமயம் ஆண் வழக்கமான எதிர்பார்ப்புகளுடன் இருந்தால் என்னவாகும்? இந்த ஒரு சூழலை மையமாகக் கொண்டு ஆண்-பெண் உறவில் உளவியல் ரீதியான சிக்கல்களையும், எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்தையும் நுட்பமாக வெளிப்படுத்துகிறது இந்நாவல்.




நாடக நடிகை கல்யாணியும், நாடக விமர்சனம் எழுதும் ரங்காவும் ஒரு அமளியின் நடுவே சந்திக்கின்றனர். பார்த்த மாத்திரத்தில் இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சந்திக்க காரணம் தேடுகின்றனர். பின்னர் காதல் கொள்கிறார்கள். கல்யாணிக்குப் பாதுகாவலராகவும், அவள் நலனில் அக்கறை கொண்டவருமாக இருக்கும் அண்ணாசாமி கல்யாணி-ரங்கா இருவரும் கல்யாணம் செய்ய யோசனை கூறுகிறார். ரங்காவும் சம்மதிக்கிறான். 

Jeyakanthan


கல்யாணிக்கு ஒரு சொந்த வீடு இருந்தும், திருமணத்திற்கு பிறகு இருவரும் ரங்காவின் வருமானத்திற்கேற்ப ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார்கள். இந்த பொருளாதார வேறுபாட்டிலினால் எந்த சச்சரவும் வரவில்லை எனினும் இருவரின் இயல்பும் எதிரெதிராக இருப்பதை ரங்கா உணர்கிறான். அவன் எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. ஒரு கட்டத்தில் அவள் இவனுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராய் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறான். அவளுக்கு உயிரான நாடகத்தையும் துறக்க வேண்டும் என்று நினைக்கிறான். கல்யாணியோ அவனிடம் எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அன்பு கொள்கிறாள் - மனைவி என்ற அங்கீகாரம் உட்பட. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய சம உரிமையை எளிதாக எடுத்துக்கொள்கிறாள். இந்த contrasting இயல்புகளே இவர்களின் பிரிவுக்கு காரணமாகின்றன. 

அந்த பிரிவு இருவர் மீதும் என்னன்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மீதி கதை. கல்யாணி-ரங்கா இருவருக்கிடையே ஏற்படும் ஈர்ப்புக்கான justification சரிவர இல்லை. தங்கள் திருமண நிலையை பற்றி இருவரின் உரையாடல்கள் நீண்டு கொண்டே போவதும், ஆங்காங்கே repetition ஆவதும் தொய்வு. எனினும் இந்நாவல் மனித இயல்பின் எதார்த்தத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. 

No comments:

Post a Comment

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...