Showing posts with label Collection. Show all posts
Showing posts with label Collection. Show all posts

Friday, 30 August 2024

ந. பிச்சமூர்த்தியின் "ஜம்பரும் வேஷ்டியும்"

ந.பிச்சமூர்த்தியின் "ஜம்பரும் வேஷ்டியும்" எனும் சிறுகதைத் தொகுப்பு எட்டு கதைகளை உள்ளடக்கியது. இந்த தொகுப்பில் வரும் கதைகள் மனிதர்களின் இயல்பையும், அவர்களின் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் ரீதியான மனநிலையையும் பேசுகின்றன. இங்கே என்னைக் கவர்ந்த நான்கு கதைகளைக் குறிப்பிடுகிறேன்.


"கலையும் பெண்ணும்" எனும் கதை பார்வையற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்யும் ஒரு ஓவியனைப் பற்றிய கதை. எளிமையான இக்கதையில் வரும் நிகழ்வுகள் ஒரு பெண்ணின் "consent” பற்றி மிக நுட்பமாக விவாதிக்கிறது. இக்கதையே இந்த தொகுப்பில் வரும் கதைகளில் ஆகச் சிறந்தது. 


"நல்ல வீடு" எனும் கதை ஒரு கிளப்பாக இருந்த வீட்டில் குடியேரும் ஒரு போலீஸ்காரர் மனைவி அனுபவிக்கும் சச்சரவைப் பற்றிய கதை. இன்னும் "கிளப்" தான் அந்த வீட்டில் இயங்குகிறது என நினைத்து வரும் ஆண்களை எவ்வாறு அந்த பெண் எதிர்கொள்கிறாள் என்பதை நகைச்சுவையாக விவரிக்கிறது. வசதிக்கு பழக்கப்பட்ட பெண், அந்த வசதியை நாடிப் போவதால் வரும் விளைவுகள், சமூகத்தின் எதிர்பார்ப்புகளால் சந்திக்கும் தேவையற்ற சிக்கல்கள், அதன் விளைவாய் பல நேரங்களில் சமூகத்தோடு ஒத்துப்போகும் கட்டாயம் ஏற்படுதல் ஆகியவற்றை பேசுகிறது.

"ஜம்பரும் வேஷ்டியும்" இரு நண்பர்களைப் பற்றிய கதை. எதையும் எதிர்பாரா நட்பையும், நட்பின் புரிதலையும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நண்பர்களின் வழக்கத்தையும் பேசுகிறது. கதையில் வரும் ஒரு பிரச்சினை கணவன்-மனைவியிடையே பேசப்படும் போது பெரிதாகவும், அதே சமயம் நண்பர்களிடையே பேசப்படும் போது சிறிதாகவும் தெரியும் முரணை வெளிப்படுத்துகிறது. ஆங்காங்கே வரும் stereotypes-களை தவிர்த்து ஆண்-ஆண், ஆண்-பெண், பெண்-பெண் உறவுகளையும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அபிப்பிராயங்களையும் உள்ளது உள்ளபடி காட்டுகிறது.

"வித்யாசம்" எனும் கதை எழுதப்பட்ட காலத்தில் ஆண்களுக்குண்டான வரட்டு கவுரவத்தையும், சின்ன சின்ன விஷயங்களில் கூட இருக்கும் egoistic மனநிலையையும் பேசுகிறது. அதே விஷயங்களில் பெண்களுக்கு இருக்கும் contrasting open-minded attitude பற்றியும் நகைச்சுவையாய் நம்மிடையே கடத்துகிறது. அதே சமயம் பிறரிடம் பழக ஆண்களுக்கு இருக்கும் தடை உடையும் தருணத்தையும் அப்பட்டமாக உண்மைக்கு நெருக்கமாக காட்டுகிறது.

இத்தொகுப்பில் பகுத்தறிவு, நாட்டார் தெய்வ வழிபாடு, ஜோதிடம் போன்றவை பற்றியும் கதைகள் அமைகின்றன. எளிய மொழிநடையில் ஆழமான மெய்யியல் கோட்பாடுகளை கடத்துகிறது இந்நூல். 

Tuesday, 27 December 2022

The Great Train Journey by Ruskin Bond

The fascination that a train kindles in a person with the grandeur in its appearance is a feeling everyone would have experienced from their childhood. The longing for the first train travel starts when a kid sees a train pass-by near their home or in a railway crossing and waves its hands - and the train never disappoints a passenger on his/her first train journey. Ruskin Bond's "The Great Train Journey" is a collection of short stories that have trains as the theme. 


The picturesque landscapes that unfold on either side of the train are beautifully put into words in some of the stories here. The stories which have kids as the central characters instil a sense of nostalgia and take us back in time to revisit our childhood. The stories written here reach both extremes - a busy railway station bustling with regular activity and a deserted railway station which has mysteries to be unearthed. The stories where the protagonist tries to uncover the mysteries behind deserted railway stations remind us the times when we had wondered about the same. The sight of a train whistling and storming out of a tunnel might leave the readers longing to experience it, especially those who haven't witnessed it standing at the foot of a tunnel.



Ruskin Bond's characters are nothing short of reality and his stories are mere reflection of the day-to-day happenings around us. A railway station is where people from all strata of the society are seen and there are times when that stratification temporarily vanishes with conversations that happen during train travel. The train journey, the co-travellers, the conversations, the vendors who keep moving along the length of the train back and forth and the happenings that keep the long journeys engaging are portrayed brilliantly here. 

Barring some repetitive themes, Ruskin Bond has given us a good collection of stories that will linger in our minds for a day or two. Few stories have something at the end that comes as a surprise and that makes this book a delightful read. 

Sunday, 18 December 2022

பட்டுக்கோட்டை பிரபாகரின் "கண்டுபிடியுங்கள்"

பட்டுக்கோட்டை பிரபாகரின் "கண்டுபிடியுங்கள்"  அவரது குறுநாவல்கள் சிலவற்றின் தொகுப்பு.


கண்டுபிடியுங்கள்
காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு ஒரு துப்பறியும் நிறுவனத்தை நாடுகிறார் நகைக் கடை உரிமையாளர் ஒருவர். கடத்தலா? கொலையா? காதலால் வீட்டை விட்டு ஓட்டமா? என்று அப்பெண் மாயமானதன் மர்மம் கதையை உயிர்ப்புடன் நகர்த்துகிறது. இடையிடையே வரும் கதாப்பாத்திரஙகளின் மர்மமான நடவடிக்கைகளும், அவர்கள் மீது எழும் சந்தேகங்களும் “suspense thriller”-களுக்கான template. முடிவில் வரும் திருப்பம் எதிர்பாராதது எனினும், அது வாசகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெறலாம். 

தயவு செய்து
நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நடுரோட்டில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறாள். அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த குடும்பத்தின் எதிர்வினையும், அதனால் வரும் நெருக்கடியும், அதிகாரமும் பணபலமும் அவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும் உரையாடல்கள் மூலம் கதையில் சொல்லப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பயம், அதன் விளைவாய் அவள் தந்தை அந்த சூழ்நிலைக்கு தேடும் தீர்வுகளும் சமூக எதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. ஆனால் அந்த எதார்த்தம் சரி தானா என கேள்வி எழுகிறது.


டேக் நம்பர் 2
விறுவிறுப்பான suspense நிறைந்த thriller கதை இது. சின்ன சந்தர்ப்பம் அமைந்தாலும் பணத்தை கரக்க பிசிரில்லாமல் திட்டம் போட்டு மோசடி செய்யும் மனிதர்கள் நிறைந்த உலகமே இந்த கதையின் களம். கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களாலும், அடுத்தடுத்து வரும் உச்சக்கட்டக் காட்சிகளாலும் கதையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. Template ஆன ஆட்கடத்தல் கதையாக ஆரம்பித்தாலும், அதை தொடர்ந்து வரும் சம்பவங்கள் இக்கதையை cliche என்று சொல்ல முடியாதபடி காப்பாற்றுகின்றன.


சந்திரன் சாட்சியாக
பெண்கள் வேலைக்கு செல்லுமிடத்தில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல்களை பலர் மௌனத்துடன் கடந்து செல்வர். ஆனால் சிலர் அதை எதிர்க்க நினைக்கும் போது அவர்களுக்கு வரும் சிக்கல்கள், அவர்களை பற்றிய சமூகத்தின் கண்ணோட்டம், சட்ட ரீதியான சாட்சியங்கள் ஆகியவை பெரும்பாலும் அவர்களை பலவீனப்படுத்துகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கும் ஒரு பெண்ணிண் கதை இது. மேம்போக்காக இந்த பிரச்சினையை அணுகி, கதையின் ஓட்டத்துக்காக commercial elements-ஐ புகுத்தி, நம்பகத்தன்மை சிறிதும் இல்லாத climax-ல் முடிகிறது இக்கதை. 

புதிய குதிரை-7-710
நகைக் கடைக் கொள்ளை - பணயமாக ஒரு பெண் ஊழியர் - கொள்ளையர்களை தேடும் அதிகாரி - வழக்கமான thriller கதை. கதை எந்த தருணத்திலும் உச்சக்கட்டத்தை அடையாமல் flat ஆக பயணிக்கிறது. விறுவிறுப்பாக அமைய கதையின் அமைப்பும், கதையின் போக்கும் கைக்கொடுக்கவில்லை. 

மதிப்புக்குரிய ரகசியம்
ஒரு decent conspiracy thriller ஆக துவங்கும் இக்கதை, அதன் பின் வழக்கமான thriller கதைகளுக்கான வரம்புக்குள் சிக்கிக் கொள்கிறது. Conspiracy பிரதானமாக இல்லாமல், அதை தடுப்பதற்காக கையாளப்படும் யுக்திகளை மட்டும் நம்பி பயணிக்கிறது. நல்ல conspiracy thriller கதைக்கான அமசங்கள் அமைந்தாலும், predictable ஆக நகர்ந்து தோற்கிறது இக்கதை.

... ஆகையால் இறந்தாள்
ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். காவல்துறை விசாரணையில் முன்னாள் காதலன், கள்ளக் காதலன் உட்பட நான்கு பேரின்பால் சந்தேகம் வருகிறது. இந்த மர்மத்தை சுற்றி கட்டமைக்கப்படும் வழக்கமான whodunit கதை Predictable climax-ல் முடிகிறது. 

மிஸ் வந்தனாவின் வாக்குமூலம் 
காதலர்கள் இருவர் வீட்டில் சம்மதம் பெற முடியாமல் ஊரைவிட்டு ஓடிப் போகின்றனர். இருவருக்கும் அங்கே காத்திருக்கும் முடிவுகளும், எதிர்பாராத  திருப்பங்களும் இக்கதையை பரபரப்பு குறையாமல் நகர்த்தி செல்கின்றன. Epilogue-ல் வரும் climax இக்கதையை Decent thriller ஆக நிறைவு செய்கிறது.

நடுவில் ஒரு நங்கை
பார்த்தவுடன் காதலில் ஆரம்பித்து முக்கோண காதல் கதையாய் மாறி பழிவாங்கும் படலத்தில் முடிகிறது இந்த கதை. மற்றுமொரு சுமாரான treatment கொண்ட கதை. 

Murder mystery, Family drama, Suspense thriller என கமர்ஷியல் கலவையாய் அமைகிறது இந்த தொகுப்பு. விமர்சனங்கள் பல இன்று இருந்தாலும், இக்கதைகள் எழுதப்பட்ட காலத்தில் வெகுஜன ஏற்பை பெற்றிருக்கலாம். மொத்தத்தில் வாசகர்களுக்கான "timepass entertainment” தந்து வெகு மக்களிடம் சென்றடையும் "pulp fiction" கதைகளின் தொகுப்பு இது. 

Thursday, 27 January 2022

எஸ்.ராமகிருஷ்ணனின் "கதாவிலாசம்"


சில கதைகள் வாசகனை கதைக்களத்தில் பார்வையாளனாகவோ, கதையின் ஓர் பாத்திரமாகவோ உலாவ விட்டு வெற்றி பெறுவன. இன்னும் சில கதைகளின் வெற்றி - வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து நினைவிலிருந்து உயிர் பெறுவது தான். அப்படிப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாய் "கதாவிலாசம்".

பல எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும், நகர வாழ்க்கையையும், பெண்களின் நிலையையும் எதார்த்தமாய் பதிவு செய்கிறார் எஸ்.இராமகிருஷ்ணன்.

உலகம் ஒரு நாடக மேடை போல, வாழ்வும் ஒரு நீண்ட சிறுகதை தொகுப்பு தான்.

"ஒரு கத சொல்லட்டா சார்?"

“Rich Blood” by Robert Bailey

A personal injury lawyer, Jason Rich, who is just out of rehab for alcoholism. His estranged sister, Jana Waters, charged with the murder of...