Showing posts with label Kilvenmani Massacre. Show all posts
Showing posts with label Kilvenmani Massacre. Show all posts

Saturday, 15 May 2021

இந்திரா பார்த்தசாரதியின் "குருதிப்புனல்"



குருதிப்புனல் - ஒரு மனிதன் தன் இயலாமையை இகழும் சமுதாயத்தின் மீது கொண்ட வஞ்சம், தனிமனிதத் தாக்குதல்களால் உண்டாகும் பழி வாங்கும் உணர்வு என்று தனிப்பட்ட பிரச்சனையை மட்டுமே முதல்நிலைப் படுத்துகிறது இந்நாவல்.

ஆனால் கிராமங்களின் சமூக சூழல், அங்கு நிலவும் சாதியக் கட்டமைப்பு, விவசாயிகளின் பொருளாதார நிலை - அதனை நிர்ணயிக்கும் மிராசுதாரர்களின் அதிகார பலம், அதன் விளைவாய் எழும் எழுச்சி ஆகியவை பின்னணியில் தள்ளப்படுகின்றன. நாவலின் நிகழ்வுகள் எல்லாம் கிராமப்புறங்களில் அன்றாடம் நடக்கும் சாதி ரீதியான தாக்குதல்களே. அதை தனிமனிதப் பகையாய் சித்தரிப்பது ஏமாற்றமே.

மொழிநடையில் மிளிரும் இந்நாவல், நடைமுறையில் நிகழும் சமூக அவலங்களின் காரணத்தை, அதனால் எழும் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்கிறது.





Jason Kasper’s “The Spider Heist”

“The Spider Heist” is the first instalment in a series of heist thrillers by Jason Kasper. Blair Morgan, a former FBI covert-entry speciali...