Sunday 30 January 2022

திரு. ஜான் சுந்தரின் "நகலிசைக் கலைஞன்"

திரு. ஜான் சுந்தரின் "நகலிசைக் கலைஞன்" மேடைக் கலைஞர்களின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக சொல்லும் ஒரு அனுபவத் தொகுப்பு.

இசையும், இசைக்கருவிகளும் வாழ்வாகவும், வாழ்வாதாரமாகவும் ஆகிப்போன மெல்லிசைக் கச்சேரிக் கலைஞர்களின் சிரிப்பு, கண்ணீர், கோபம், பசி, கேலி, கொண்டாட்டம், வலி, பயணம் என அனைத்தையும் அவர்களின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை வைத்து எதார்த்தமான மொழிநடையில் விவரிக்கிறார் எழுத்தாளர்.

மேடைக் கலைஞர்களின் பொருளாதார நிலையால் அவர்களின் குடும்பச் சிக்கல்களையும், சோகங்களையும், அவற்றை அவர்கள் இசையாலும், கிண்டல்-கேலியாலும் கடக்க முற்படுவதையும் துள்ளியமாக விவரித்து நம்மை அவர்கள் உலகிற்கு இழுத்துச் செல்கிறார்.

கச்சேரி ஏற்பாட்டிலும், ரிகர்சல்களிலும், மேடைகளிலும் நடக்கும் குழப்பங்களையும், தவறுகளையும், சமாளிப்புகளையும் நகைச்சுவையுடன் எடுத்துக்கூறுகிறார் எழுத்தாளர். பாடல் வரிகளை மறப்பதும், அதற்கு பதில் வேறு வரிகளை மாற்றி பாடுவதும், அப்படிப் பாடும்போது நா பிறழ்வால் ஏடாகூடமாவதும், அவற்றை சமாளிக்க முடியாமல் கலைஞர்கள் திண்டாடுவதும் போன்ற காட்சிகளின் விவரனையில் நம்மை கண்கள் நனைய சிரிக்க வைக்கிறார் ஜான் சுந்தர்.

பல இடங்களில் வரும் இசைஞானி இளையராஜா, எஸ்.பி.பி ஆகியோரின் பாடல்களால் இந்நூல் அவர்களுக்கான "tribute" ஆக அமைகிறது. கச்சேரிக் கலைஞர்கள் இளையராஜாவையும், எஸ்.பி.பியையும் ஏதோ அவர்கள் கூட்டாளிகள் போல பேசிக்கொள்ளும் உரையாடல்கள் எதார்த்தத்தின் உச்சம்.

புத்தகத்தின் நெடுக பல இடங்களில் நம்மை மறந்து சிரிக்க வைத்ததே ஜான் சுந்தரின் வெற்றி. நிறைவான அனுபவம் இந்த வாசிப்பு.

Thursday 27 January 2022

எஸ்.ராமகிருஷ்ணனின் "கதாவிலாசம்"


சில கதைகள் வாசகனை கதைக்களத்தில் பார்வையாளனாகவோ, கதையின் ஓர் பாத்திரமாகவோ உலாவ விட்டு வெற்றி பெறுவன. இன்னும் சில கதைகளின் வெற்றி - வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து நினைவிலிருந்து உயிர் பெறுவது தான். அப்படிப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாய் "கதாவிலாசம்".

பல எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும், நகர வாழ்க்கையையும், பெண்களின் நிலையையும் எதார்த்தமாய் பதிவு செய்கிறார் எஸ்.இராமகிருஷ்ணன்.

உலகம் ஒரு நாடக மேடை போல, வாழ்வும் ஒரு நீண்ட சிறுகதை தொகுப்பு தான்.

"ஒரு கத சொல்லட்டா சார்?"

பெருமாள் முருகனின் "மாதொருபாகன்"


எளிய மனிதர்களின் வாழ்வையும், அவர்களின் ஆசைகளையும், மன உணர்வுகளையும், குடும்பச் சிக்கல்களையும் - அதனால் வரும் மாற்றங்களயும், மூடநம்பிக்கைகளையும், இயற்கை மேல் அவர்கள் கொண்ட அன்பையும் அழுத்தமாய் பதிவிடும் நாவல்.

தேவாத்தா - அர்த்தநாரி ஒப்பீட்டு எழுந்த சர்ச்சை அர்த்தமற்றதே!

சாண்டில்யனின் "மன்னன் மகள்"

வரலாற்றுடன் கற்பனையும் கலந்து சோழர் காலத்தில் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்காகக் கையாளப்படும் ராஜ தந்திரங்களை வைத்து, விறுவிறுப்பான கதைக்களத்தை உறுவாக்கி கமர்ஷியல் கலவையாய் "மன்னன் மகள்"


ஆனால் பெண் அடிமைத் தனத்தைத் தவறெனச் சுட்டிக் காட்டாமல், பெண்ணைத் தலைப்பில் மட்டும் பிரதானப் படுத்தித் தட்டிக் கழிக்கும் மற்றுமோர் நாவல்.


தகழி சிவசங்கரம் எழுதிய "செம்மீன்" - தமிழில் சுந்தர ராமசாமி

கடலோர மீனவர்களின் சாகச வாழ்வையும், வாழ்க்கை நெறியையும், வாழ்க்கை நெறி விதிக்கும் கட்டுப்பாடுகளையும், சாதி-மதம் போதிக்கும் மூடநம்பிக்கைகளை கண்மூடித்தனமாய் நம்பி, சமூகத்திற்காக அவற்றை ஏற்றும் நடக்கும் மனிதர்களின் எளிய வாழ்வின் எதார்த்த உலகத்தைக் காட்சிப்படுத்தும் நாவல்.


கற்பு என்ற நிலையை பெண்களுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தும் நிர்ப்பந்தக் கற்புமுறையால், ஒரு பெண் தன்னைத் தன் சமூகத்தின் அவச்சொல்லில் இருந்து காக்க, தன் உணர்வுகளை புதைத்து, தனது வாழ்வை கற்பனையானத் தவவாழ்வாய் மாற்றப் படும் போராட்டம் தான் இந்த "செம்மீன்" சொல்லும் கதை‌.

Monday 24 January 2022

Agatha Christie's "And Then There Were None"

Ten different people invited to an island by their acquaintances arrive only to find out that they were lured here by an unknown host. Everyone has a secret past and unearthing which will have them guilty of a crime. They get murdered one by one for this secret they hold and there is no way to escape death as the island loses contact with the mainland due to a heavy storm. There is increasing tension as each one suspects the other.


With this interesting premise, the novel tries to hold the attention of the readers once the characters are settled. But, the build up to the revelation is slow and takes ample time considering the proceedings need to take place in a closed repetitive atmosphere. A solid climax that unfolds in the epilogue makes up for it and makes this novel a satisfying read.

Tuesday 18 January 2022

ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய "தமிழ் சினிமா - புனைவில் இயங்கும் சமூகம்"

திரு. ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய இப்புத்தகம் தமிழ் சினிமாவில் சாதிய ரீதியான சித்தரிப்புகளைப் பற்றிய விரிவான ஒரு ஆய்வு. தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக படமாக்கபடும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான சாதி ரீதியான காட்சிகளை மேற்கோள் காட்டி அவற்றை சமூக சூழலோடு பொருத்திப் பார்க்கிறது இந்த ஆய்வு.

சாதிய அமைப்பு அழுத்தமாக வேரூன்றியிருக்கும் கிராமங்களையும், தென் தமிழக வட்டாரங்களையும் திரைப்படங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதுடன் சாதிய அமைப்பை எப்படிப் பேணிக் காக்கின்றன என்பதையும் விவரிக்கிறது. பெரும்பாலும் எதார்த்தம் என ஊடகங்களாலும் விமர்சகர்களாலும் கூறப்படும் படங்கள் உண்மையில் இடைநிலை ஆதிக்க சாதியின் வழக்கங்களை கிராமிய வழக்கம் என பொதுமைப்படுத்தி நிருவிச் செல்வதையும், அவற்றை மீண்டும் மீண்டும் உற்பத்திச் செய்து அதையே எதார்த்தம் எனும் பிம்பமாய் கட்டமைப்பதையும், அவை இடைநிலை சாதிகளுக்குத் தரும் உளவியல் ரீதியான பலத்தையும் எளிமையாய் விளக்குகிறது.

சுய சாதி விமர்சனமின்றி எடுக்கப்படும் இப்படங்களில் ஒடுக்கப்பட்டோரின் நிலை உண்மைக்குப் புறம்பாகவோ வசதிக்கேற்ப மொளனப்படுத்தியோ கடத்திச் செல்வதும் வழக்கம் என எடுத்துக்காட்டுகளுடன் வரும் கட்டுரைகள் பார்வையாளனாக நம்மையும், நம் ரசனையையும் சுய மதிப்பீடு செய்யத் தூண்டுகின்றன. தியேட்டர்களுக்குச் சென்று விசிலடித்து, ஆர்ப்பரித்து, சில்லறைகளை சிதறவிட்டுப் பார்த்த காட்சிகளுக்குப் பின்னால் சுய சாதி பெருமையும், சாதிய குறியீடுகளும் இருப்பதை எழுத்தாளர் விளக்கி அந்தக் காட்சிகளில் வரும் நாயக சாகசங்களை, நரம்பு புடைக்கப் பேசும் வசனங்களை அடித்து உடைத்தெறிகிறார்.

இப்புத்தகத்தில் வரும் கட்டுரைகளில் ஆகச் சிறந்த கட்டுரை வடிவேலுவின் நகைச்சுவை பற்றிய பார்வை. அதிகார அடையாளங்கள் மற்றும் சாதிய அமைப்பு மீது எவ்வாறு வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் தாக்குதல் செய்கின்றன என்பதை ஆராய்கிறது. படத்தில் வரும் சாகச காட்சிகள் நம்பகத்தன்மையோடும், அதே சமயம் நகைச்சுவைக் காட்சிகள் நம்ப முடியாதவையாகவும் பார்க்கும் மனநிலை இங்கே உருவாகியிருப்பது அபத்தம் என தெள்ளத் தெளிவாய் காட்டுகிறது. உண்மையில் நகைச்சுவைக் காட்சிகளில் வரும் பாத்திரங்களே உண்மையான, எதார்த்தத்திற்கு நெருக்கமான பாத்திரங்கள். அதை வடிவேலு தன் எதார்த்தமான உடல்மொழியாலும், வட்டார வழக்காலும் திரையில் சிரமமின்றி கடத்துகிறார். இதை மீண்டும் நமக்கு வசனங்களையும், காட்சிகளையும் எடுத்துக்காட்டி நினைவூட்டுகிறது இக்கட்டுரை. இக்கருத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கும் தாமோ நாகபூஷனம் என்பவர் வரைந்த அட்டைப்படம் அட்டகாசம்.

இறுதியாக அண்மையில் வந்த தலித்துகளின் வாழ்வை பதிவு செய்து அவர்கள் குரலாய் ஒலித்த சில படங்களை விமர்சனத்திற்கு உட்படுத்தி, அதே சமயம் அவை சாதிய சினிமாக்களில் இருந்து எவ்வாறு விலகி நிற்கின்றன என்பதைக் காட்டுகிறார்.

இந்தப் புத்தகம் வாசித்தது ஒரு புது அனுபவம்.

Friday 14 January 2022

Harlan Coben's "Tell No One"

A pediatrician who is a grieving husband after his wife's abduction and murder, a serial killer, a witness, a mysterious email to the pediatrician after 8 years impersonating his wife and a rich man whose legacy is in danger. This premise catapults this novel into an intriguing suspense at the very beginning. The build up to the revelations that ensues is interesting and convincing. A flawless narration and a decent climax keeps the readers engrossed till the end.



Saturday 8 January 2022

அஜயன் பாலாவின் "நாயகன் பெரியார்"

திரு. அஜயன் பாலா எழுதிய "நாயகன் பெரியார்" நூலை Amazon Kindle-ல் இன்று படித்தேன்.

பெரியாரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளைத் திரட்டி ஒரு சிறு வாழ்க்கை வரலாறாக இந்நூலைத் தொகுத்திருக்கிறார். பெரியாரின் பொது வாழ்க்கையோடு நில்லாமல் அவரது சொந்த வாழ்க்கையையும், அதில் அவர் சந்தித்த இழப்புகளையும், உளவியல் ரீதியான அழுத்தங்களையும், அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பதையும் விளக்குகிறது இந்நூல்.

பெரியார் அவர்கள் காந்தியக் கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பால் காங்கிரஸில் இணைந்தாலும், பின்னாளில் நாட்டு விடுதலையை விட சமூக விடுதலையே பிரதானமென காங்கிரஸில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் துவங்கியதின் காரணத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறார் எழுத்தாளர். அதில் பெரியாரின் கொள்கைப் பிடிப்பு தெளிவாய் தெரிந்தது.

பெரியார் முன்னெடுத்த போராட்டங்களில் அவரது மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மா ஆகியோரின் பங்களிப்பே பெரியார் பெண் சுதந்திரத்தை கொள்கைப் பரப்புரைகளோடு நிறுத்தாமல், அதை சொந்த வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதற்கு சான்று. இவ்விரு பெண்களின் போராட்ட குணமும் இந்நூலில் இடம்பெறுகிறது.

தேர்தல் அரசியலில் இருந்து விலகி, சாதிய ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்து இச்சமூகத்தை சுயமரியாதை மிக்கச் சமூகமாய் மாற்றிய தலைவனுக்கு இந்நூல் ஒரு "tribute". 

Friday 7 January 2022

"Bhagat Singh - The Eternal Rebel" by Prof. Malvinder Jit Singh

This book written by Prof. Malvinder Jit Singh is a biography of Bhagat Singh that captures in detail the various events of his life - both personal and political.

Though he has a cult following in India at present, there is often an image of a pistol brandishing angry young man portrayed on him. This book reveals the true nature of Bhagat Singh. It talks about how he valued human lives and never believed in bloodshed, despite being an extremist in the freedom struggle.

His contrasting transformation into a communist hailing from a family with Arya Samaj connection shows the independent intellect in him. The biography also puts forth Bhagat Singh as a voracious reader. It explains how some of his favourite reads had an impact on his thinking and the activities he was involved in.

This book details how Bhagat Singh was drawn towards communism - he and his colleagues wanted to organize the peasants, labourers and working class across the nation to raise voice against the imperialists. This is evident when Bhagat Singh and BK Dutt involved themselves in the assembly bombing incident as a sign of protest against the passing of trade dispute bill which imposed restrictions on workers from organizing and conducting strikes for their demands.

The sufferings of Bhagat Singh and his colleagues in jail, and the unjust treatment they received in the judicial proceedings are touched upon here; the resistance they had shown, by withstanding the pain, in order to make their stand is astonishing.

Some of the articles written by Bhagat Singh in newspapers, books and his jail notebook also find a place in this book. One of the articles on untouchables written by him indicates that Bhagat Singh opposed not just the social hierarchy but also the caste hierarchy. This particular article resonates Dr. Ambedkar's take on the unjust hierarchical structure prevalent in Indian society.

His courage even while facing the gallows and while anticipating death, his undying thirst for the freedom of the country, his determination to stand by his principles and his rationalist approach are inspiring. There is no denial that Bhagat Singh can never be ignored in youth politics.

"Inquilab Zindabad"

"My Childhood" by Maxim Gorky

Maxim Gorky's "My Childhood", his autobiography is a painful recollection of his childhood that was strewn with poverty, lonel...