Monday, 20 November 2023

சுந்தர ராமசாமியின் "திரைகள் ஆயிரம்"

சுந்தர ராமசாமியின் "திரைகள் ஆயிரம்", நாளிதழ் ஒன்றில் வெளியாகும் ஒரு வல்லுறவு சம்பவத்தின் செய்தியில் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட பெண் தொடரும் வழக்கில் பல பெரும் பணக்காரர்களும், அதிகாரிகளும் பெயரிடப்படுகின்றனர். அதிகாரத்தின் ஆதிக்கத்தாலும், ஊடக சுதந்திரத்தின் துஷ்பிரயோகத்தாலும் உண்மைகள் விற்கப்படுகின்றன. எது உண்மை என்பதை எழுத்தாளன் ஒருவன் தேட முற்படுகிறான், அவனது கதையாடலில் இந்நாவல் பல திருப்புமுனைகள் கொண்டு பயணிக்கிறது. 



எது உண்மை எது பொய் என்பதை தாண்டி சமூகத்தில் பெண்களின் நிலை, அதிகாரத்தின் வரம்பு மீறல், மக்களின் ஒருதலை சார்பு மற்றும் preconceived notion, அரசாங்கம் மற்றும் பண பலம் படைத்தோர் நீதிமன்றங்களின் மீது செலுத்தும் தாக்கம் என சமகால அரசியல் மற்றும் சமூக சூழலுக்கும் பொருந்தி போகிறது இந்நாவல். 

ஒரு sensitive subject-ஐ சுற்றி பயணித்தும், அழுத்தமான வசனங்கள் இல்லாமல் தட்டையாக அமைகிறது இக்கதை.

No comments:

Post a Comment

“From Raaja with Love” – A Breeze Through Chennai’s Scorching Heat

As a long-time admirer of his music, attending one of his live concerts had been on my bucket list since my college days. After years of wai...