Showing posts with label Writer duo Suba. Show all posts
Showing posts with label Writer duo Suba. Show all posts

Tuesday, 17 February 2026

சுபாவின் "கம்பிகளுக்குப் பின்னே"

எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலகிருஷ்ணன் இருவரும் “சுபா” எனும் புனைப்பெயரில் நாவல்களும், திரைப்பட திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளனர். அயன், கோ, தனி ஒருவன் போன்ற ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர்.



சுபாவின் “கம்பிகளுக்குப் பின்னே” ஒரு template murder mystery நாவல். ஒரு நீதிபதி, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு மருத்துவர் - அடுத்தடுத்து நடக்கும் மூன்று கொலைகள். மூன்று கொலைகளும் தனித்தனி சம்பவங்களா? இல்லை தொடர்புடையனவா? சுபாவின் very own Sherlock Holmes “நரேன்” மீண்டும் தோன்றும் மற்றுமொரு மர்ம நாவல்.



இந்நாவலில் வரும் crime scene-களின் வர்ணனை staging and detailing உடன் மிக நுட்பமாக அமைகிறது. Action, suspense, romance என ஒரு கமர்ஷியல் கலவையாக பயணிக்கிறது. இறுதி பக்கம் வரை நாவலின் suspense தொடர்கிறது. ஆனால் அதை தொடர்ந்து வரும் twist just touch and go.



நாவலில் இடம்பெறும் சென்னையின் வர்ணனை சமகால நிகழ்வுகளை பதிவு செய்தாலும் திருவல்லிக்கேணி, மைலாப்பூர் வர்ணனைக்கும் - சைதாப்பேட்டை வர்ணனைக்கும் உள்ள வேறுபாடு தான் stereotyping. இதைத் தான் தமிழ் சினிமா தற்சமயம் மாற்றி வருகிறது.

இந்த குறைகளை மீறி சுபாவின் “கம்பிகளுக்குப் பின்னே” ஒரு entertaining and engaging murder mystery with all commercial ingredients!

Wednesday, 6 November 2024

"சுபா"வின் "இரவோடு இரவாக"

எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலகிருஷ்ணன் இருவரும் "சுபா" எனும் புனைப்பெயரில் நாவல்களும், திரைப்பட திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளனர். அயன், கோ, தனி ஒருவன் போன்ற ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். 


இவர்களது "இரவோடு இரவாக" ஒரு serial murder mystery ஆக ஆரம்பிக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இளம்பெண்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். இவர்கள் சமீபத்தில் தான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட பெண்கள் அனைவரின் தந்தையும் அரசு அதிகாரியாகவோ, மந்திரியாகவோ இருக்கின்றனர். இந்த தொடர் கொலைகளில் ஒரு pattern and signature இருப்பதால் போலீஸ் ஒரு serial killer-ஐ தேடுகின்றனர்.
 

சுபாவின் detective duo நரேந்திரன் - வைஜயந்தி இந்த investigation-ல் involve ஆகும் சூழல் ஏற்படுகிறது. இவர்கள் தேடுவது ஒரு psycho கொலைகாரனா? அடுத்த கொலை நிகழும் முன் அவனது mask அவிழுமா? இப்படி ஒரு template serial murder mystery ஆக இந்நாவல் நகர்ந்தும், அதன் treatment-ல் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஆங்காங்கே சில twists திணிக்கப்பட்டிருந்தாலும், வேகம் குறையாமல் கதை நகர்கிறது. 

Pre-climaxல் கதையின் ஓட்டத்தை வைத்து வலுவான backstory இல்லாத சாதாரண mystery நாவலென brand செய்வதற்குள் climaxல் வரும் எதிர்பாராத convincing twist நாவலை காப்பாற்றுகிறது. Cheesy scenes-ஐ தவிர்த்து ஒரு good mystery novel. 

Monday, 16 September 2024

"சுபா"வின் "விறைத்த விழிகள்"

எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலகிருஷ்ணன் இருவரும் "சுபா" எனும் புனைப்பெயரில் நாவல்களும், திரைப்பட திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளனர். அயன், கோ, தனி ஒருவன் போன்ற ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். 



"விறைத்த விழிகள்" இவர்களது குறுநாவல். ஒருவன் திட்டமிட்ட ஒரு கொலை செய்ய எத்தனிக்கும் போது collateral damage ஆக இன்னொரு கொலையும் செய்ய வேண்டிய கட்டாயம். அது மட்டுமல்லாமல், அங்கே நடக்கும் எதிர்பாரா encounter-ல் தடயங்களும் தவறவிடப்படுகின்றன. பிரபலமான அந்த நபர் எதற்காக தானே இறங்கி அந்த கொலையில் ஈடுபட வேண்டும்? பண பலத்தால் தடயங்களை அழிக்க முற்படும் போது அது கைகூடியதா? இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டதா? 


இப்படி ஒரு template thriller ஆக அமைகிறது இந்நாவல். எனினும் characterisation, கதையில் வரும் காட்சிகளின் treatment, கதைமாந்தர்களின் செயல்களுக்கான justification இந்நாவலை உயிர்ப்புடன் வைக்கிறது. Predictable climax ஆக முடிகிறது, ஆனால் முன்னுரையில் அதற்கான suspense முடிச்சு well planned execution.

மொத்தத்தில் predictable yet free-flowing thriller!

“Lightning” by Dean Koontz

On a night marked by a freak lightning storm, a mysterious blond stranger intervenes at Laura Shane’s birth, preventing an inebriated doctor...