Wednesday, 6 November 2024

"சுபா"வின் "இரவோடு இரவாக"

எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலகிருஷ்ணன் இருவரும் "சுபா" எனும் புனைப்பெயரில் நாவல்களும், திரைப்பட திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளனர். அயன், கோ, தனி ஒருவன் போன்ற ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். 


இவர்களது "இரவோடு இரவாக" ஒரு serial murder mystery ஆக ஆரம்பிக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இளம்பெண்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். இவர்கள் சமீபத்தில் தான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட பெண்கள் அனைவரின் தந்தையும் அரசு அதிகாரியாகவோ, மந்திரியாகவோ இருக்கின்றனர். இந்த தொடர் கொலைகளில் ஒரு pattern and signature இருப்பதால் போலீஸ் ஒரு serial killer-ஐ தேடுகின்றனர்.
 

சுபாவின் detective duo நரேந்திரன் - வைஜயந்தி இந்த investigation-ல் involve ஆகும் சூழல் ஏற்படுகிறது. இவர்கள் தேடுவது ஒரு psycho கொலைகாரனா? அடுத்த கொலை நிகழும் முன் அவனது mask அவிழுமா? இப்படி ஒரு template serial murder mystery ஆக இந்நாவல் நகர்ந்தும், அதன் treatment-ல் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஆங்காங்கே சில twists திணிக்கப்பட்டிருந்தாலும், வேகம் குறையாமல் கதை நகர்கிறது. 

Pre-climaxல் கதையின் ஓட்டத்தை வைத்து வலுவான backstory இல்லாத சாதாரண mystery நாவலென brand செய்வதற்குள் climaxல் வரும் எதிர்பாராத convincing twist நாவலை காப்பாற்றுகிறது. Cheesy scenes-ஐ தவிர்த்து ஒரு good mystery novel. 

No comments:

Post a Comment

“Rich Blood” by Robert Bailey

A personal injury lawyer, Jason Rich, who is just out of rehab for alcoholism. His estranged sister, Jana Waters, charged with the murder of...