Showing posts with label Women Protagonists. Show all posts
Showing posts with label Women Protagonists. Show all posts

Saturday, 24 February 2024

ராஜேஷ் குமாரின் "ஒரு துளி கடல்"

க்ரைம் மற்றும் மர்ம நாவல்களில் பிரசித்தி பெற்ற ராஜேஷ் குமாரின் ஒரு social drama இந்த நாவல். இருவேறு கதைக்களம், இருவேறு சூழ்நிலை, இரண்டு பெண் கதாப்பாத்திரங்கள் என இந்நாவல் தங்குதடையற்ற non-linear narrative ஆக பயணிக்கிறது.
 

சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை மீற முற்படாத பெண்ணாக பூர்ணிமா - வேறு ஒரு கதைகளத்தில் தன் சுதந்திரத்தை உணர்ந்து சமூகம் மூர்க்கமாக கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டுகளிலிருந்து விடுபட முயலும் பெண்ணாக ரோகிணி. ஒரு ஆணின் சுயநலத்தால் இவ்விரு பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அவற்றை சமாளிக்க அவர்கள் எடுக்கும் முடிவுகளுமே கதையின் கரு. பிரச்சினைகளை எதிர்கொள்ள பூர்ணிமா தியாகம் செய்கிறாள், ரோகிணி சமரசமில்லாமல் எதிர்த்து நிற்கிறாள். 

இவ்விரு கதைகளின் பிண்ணனியில் இரத்த தானம், உடலுறுப்பு தானம், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், அடுத்த தெரு மருத்துவருக்கும் multi specialty மருத்துவமணையின் மருத்துவருக்குமான ethics ரீதியான வேற்றுமை ஆகியவை பற்றிய social commentary மேலோட்டமாய் அமைந்தாலும் கதையோடு பொருந்தி அமைகிறது.


பல திருப்புமுனைகளுடன் அமையும் கதையோட்டம், பேச்சுவழக்கான வார்த்தை பிரயோகம், எளிய மொழியில் அமையும் கதைசொல்லல் முறை ஆகியவை வெகுஜன மக்களிடம் ராஜேஷ் குமாரின் நாவல்களை சேர்த்துள்ளன. அதனால், இந்நாவலில் அமையும் "over the top” காட்சிகள் கூட கதையின் ஒட்டத்தை எந்தவிதத்திலும் பாதிக்காமல் நகர்கின்றன.

“Lightning” by Dean Koontz

On a night marked by a freak lightning storm, a mysterious blond stranger intervenes at Laura Shane’s birth, preventing an inebriated doctor...