Showing posts with label Kavignar Vaali. Show all posts
Showing posts with label Kavignar Vaali. Show all posts

Thursday, 25 July 2024

கவிஞர் யுகபாரதியின் "வாலிப வார்த்தைகள்"

கவிஞர் வாலியுடனான முதல் சந்திப்பில் துவங்கி, அவருடன் பயணித்த அனுபவங்களையும், அவருடனான உரையாடல்களையும் இந்நூலில் பதிவிடுகிறார் யுகபாரதி. கவிஞர் வாலியின் நம்பிக்கை, இயல்பு, சுயமரியாதை என பலவற்றையும் இந்நூல் பேசுகிறது. வாலி அவர்கள் பாடல் வரிகள் எழுதும் வேகத்தையும், எப்பொழுதும் trend-ல் இருக்கும் அவரது அசாத்திய கற்பனைகளையும் பல இடங்களில் விவரிக்கிறார் யுகபாரதி.



சமரசமில்லாமல் சினிமா உலகம் இயங்காது என்பதை புரிந்துகொண்ட கவிஞர் வாலி அதை செய்ய தயங்கியதில்லை, ஆனால் அதே சமயம் சுயமரியாதையை என்றும் விட்டுக்கொடுத்ததில்லை என்று பல தருணங்களை சுட்டிக்காட்டி பேசுகிறது இந்நூல். அரசியல் தலைவர்களிடம் கவிஞருக்கு இருந்த தோழமை, மாற்றுக் கருத்துக்கும் மாற்றுச் சிந்தனைக்கும் அவர் கொடுத்த மதிப்பு, சினிமா துறையில் இருக்கும் sentiment மற்றும் மூடநம்பிக்கைகளில் ஈடுபாடு இல்லாமல் இருந்தும் அவர் அவற்றை மற்றவர்களுக்காக சகித்து கொண்டது  போன்றவற்றை வாசிக்கும் போது அவரது democratic approach புரிகிறது. 


கவிஞரின் பாடல் வரிகளை பற்றிய வர்ணணை இந்த நூலில் குறைவாக இருப்பது ஏமாற்றமே. யுகபாரதியின் "இசை அல்லது இளையராஜா" நூலில் இருந்த இளையராஜாவின் இசையை பற்றிய வர்ணணை போல இங்கு இடம்பெறவில்லை. அது இந்நூலின் நோக்கமாக இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அந்த எதிர்பார்ப்பினால் தானோ இந்நூல் நிறைவான வாசிப்பாக இல்லை.

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...