Tuesday, 17 February 2026

சுபாவின் "கம்பிகளுக்குப் பின்னே"

எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலகிருஷ்ணன் இருவரும் “சுபா” எனும் புனைப்பெயரில் நாவல்களும், திரைப்பட திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளனர். அயன், கோ, தனி ஒருவன் போன்ற ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர்.



சுபாவின் “கம்பிகளுக்குப் பின்னே” ஒரு template murder mystery நாவல். ஒரு நீதிபதி, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு மருத்துவர் - அடுத்தடுத்து நடக்கும் மூன்று கொலைகள். மூன்று கொலைகளும் தனித்தனி சம்பவங்களா? இல்லை தொடர்புடையனவா? சுபாவின் very own Sherlock Holmes “நரேன்” மீண்டும் தோன்றும் மற்றுமொரு மர்ம நாவல்.



இந்நாவலில் வரும் crime scene-களின் வர்ணனை staging and detailing உடன் மிக நுட்பமாக அமைகிறது. Action, suspense, romance என ஒரு கமர்ஷியல் கலவையாக பயணிக்கிறது. இறுதி பக்கம் வரை நாவலின் suspense தொடர்கிறது. ஆனால் அதை தொடர்ந்து வரும் twist just touch and go.



நாவலில் இடம்பெறும் சென்னையின் வர்ணனை சமகால நிகழ்வுகளை பதிவு செய்தாலும் திருவல்லிக்கேணி, மைலாப்பூர் வர்ணனைக்கும் - சைதாப்பேட்டை வர்ணனைக்கும் உள்ள வேறுபாடு தான் stereotyping. இதைத் தான் தமிழ் சினிமா தற்சமயம் மாற்றி வருகிறது.

இந்த குறைகளை மீறி சுபாவின் “கம்பிகளுக்குப் பின்னே” ஒரு entertaining and engaging murder mystery with all commercial ingredients!

No comments:

Post a Comment

“From Raaja with Love” – A Breeze Through Chennai’s Scorching Heat

As a long-time admirer of his music, attending one of his live concerts had been on my bucket list since my college days. After years of wai...