Saturday, 22 May 2021

கவிஞர் கலி.பூங்குன்றனின் "பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?"


தந்தை பெரியாரைப் பற்றிய திரிபு பிரச்சாரங்களை தினம் தினம் ஊடகங்களில் கூவும் வலதுசாரிகளுக்கு, அவற்றைத் தகர்த்தெறியும் வரலாற்று ஆவணங்களை மேற்கோள் காட்டி பதில் கூறும் நூல்.
சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றில் அம்பேத்கரும் பெரியாரும் ஒத்த நிலை எடுத்ததை பல இடங்களில் இந்நூலிலும் உணர்ந்தேன்.


தமிழ் மொழிப் பற்றிய பெரியாரின் கருத்துக்களின் அர்த்தத்தை மாற்றி உலாவும் விமர்சனங்களுக்கும் விளக்கம் தருகிறது இந்நூல்.
இன்றளவும் பெரியார் ஏன் தமிழகத்தின் தவிர்க்க முடியாத விசையாக இருக்கிறார், கடவுள் மறுப்பு என்ற ஒற்றை காரணத்தைக் கொண்டு ஏன் மக்களிடம் இருந்து அவரை விலக்க முடியவில்லை என்பவற்றிற்கு இந்நூல் கூறும் பெரியாரின் தொண்டு சான்று.

No comments:

Post a Comment

“Lightning” by Dean Koontz

On a night marked by a freak lightning storm, a mysterious blond stranger intervenes at Laura Shane’s birth, preventing an inebriated doctor...