Sunday, 8 February 2026

சுஜாதாவின் "நில்... கவனி... தாக்கு!"

சுஜாதாவின் “நில்… கவனி… தாக்கு…!” முழுக்க முழுக்க first-person narration-ல் சொல்லப்படும் ஒரு conspiracy thriller நாவல்.

நாட்டின் ரகசியங்களை பாதுகாக்கும் அமைப்பில் பணியாற்றும் ஒருவன், ஒரு அணு விஞ்ஞானியை விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர நியமிக்கப்படுகிறான். அழைத்து வரும் வழியில் விஞ்ஞானி ஒரு மர்ம கும்பலால் கடத்தப்படுகிறார். 

இந்த கடத்தல் தன் மேற்பார்வையில் நடந்ததன் தீவிரம் அவனுக்கு புரியும்போது, தனது தவறை நினைத்து பயம் மற்றும் குற்ற உணர்வு அவனை ஆட்கொள்கிறது. அதே நேரத்தில், எந்த ஆதரவுமின்றி தனி ஆளாகவே விஞ்ஞானியை மீட்க களமிறங்குகிறான். அங்கிருந்து பல action காட்சிகளுடன் ஒரு action thriller ஆக மாறுகிறது கதையின் போக்கு.



Sole twist ஒன்றை நோக்கி நகரும் இந்த நாவல், இறுதிவரை சற்று தொய்வுகளுடனே பயணிக்கிறது. அந்த ஒரே twist உண்மையிலேயே திருப்திகரமாக இருக்கிறதா என்பது சந்தேகமே. நல்ல premise இருந்தும், conspiracy thriller ஆக தொடராமல் ஒரு passable read ஆக மட்டுமே அமைகிறது.

No comments:

Post a Comment

சுஜாதாவின் "நில்... கவனி... தாக்கு!"

சுஜாதாவின் “நில்… கவனி… தாக்கு…!” முழுக்க முழுக்க first-person narration-ல் சொல்லப்படும் ஒரு conspiracy thriller நாவல். நாட்டின் ரகசியங்களை ...