Sunday, 4 August 2024

சுஜாதாவின் "மீண்டும் ஒரு குற்றம்"

சுஜாதாவின் "மீண்டும் ஒரு குற்றம்" வழக்கறிஞர்கள் கணேஷ்-வசந்த் duo தோன்றும் மற்றுமொரு murder mystery. பிரபல தொழிலதிபர் சிவப்பிரகாசம் என்பவர் கணேஷை தொலைப்பேசியில் அழைத்து தன்னைக் கொலை செய்ய சதி நடக்கிறது எனக் கூறி அவனது உதவியை நாடுகிறார், அரை மணி நேரத்துக்குள் தன்னை வந்து சந்திக்குமாறும் வற்புறுத்துகிறார். கணேஷ்-வசந்த் அங்கே சென்றடைவதற்குள் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். தொழில் விரோதம், குடும்பச் சிக்கல், சொத்துரிமை தகராறு என பல குழப்பங்களுக்கு நடுவில் கணேஷ்-வசந்த் இருவரின் investigation துவங்குகிறது. 




ஒரு template murder mystery ஆக துவங்கும் இந்நாவல் ஒரு investigation drama-வாக மாறி பயணிக்கிறது. ஆனால் ஒரு மர்ம நாவலுக்கு தேவையான பரபரப்பு குறைவே. நாவல் நெடுக வரும் ஆபாச வசனங்கள் சாதிப்பது “objectifying women” மட்டுமே, கதையின் ஓட்டத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ஆங்காங்கே அமையும் அரசியல் வசனங்களில் சுஜாதாவின் ideological stance வெளிப்படுகிறது. 

நாவலின் நீளம் குறைவானதாக இருப்பது சாதகமாக அமைகிறது. எனினும் இந்நாவல் புதிதாக ஏதும் வழங்காத ஒரு highly predictable, done and dusted murder mystery. 

No comments:

Post a Comment

Mareesan - a slow burn suspense thriller backed by a brilliant Vadivelu and an effortless FaFa

Mareesan is a suspense thriller that has Vadivelu and Fahadh Faasil sharing screen space for the second time. Velayudham (Vadivelu), an Alzh...