Friday, 8 January 2016

தமிழ்


பன்மொழிகள் இவ்வுலகில் தோன்றி மறைந்தும்,
தொண்மொழி எங்கள் தமிழும் பாரும்!
தென்பரத நாட்டில் முடங்கிய போதும்,
வான்புகழ் கொண்ட செம்மொழி ஆகும்!

ஆயிரம் மழைத்துளி கடலில் சேரும்,
அதிலொரு துளி மட்டும் முத்தாய் மாறும்,
ஆயிரம் கவிகள் இப்புவியில் பிறந்தும்,
இருவரியில் புவி தந்தக் கவியும் பாரும்!

இசையும் மொழியே என்பார் பலரும்,
தமிழும் இசையே என்பேன் நானும்!
தமிழ் மெல்லச் செத்தது போதும்,
மறுபிறவி கொண்டு செழித்திட காண்போம்!

எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்

No comments:

Post a Comment

John Grisham’s “The Exchange”

John Grisham’s “The Exchange” touted to be a sequel to his previous blockbuster novel “The Firm” starts off as a legal thriller and later sh...