Sunday, 27 December 2015

கடவுள் யார்?


சிலையும் சிலுவையும் பரம்பொருள் என்றும்,
கதையின் நாயகன் கடவுள் என்றும்,
காவி துறவி சாமி என்றும்,
மதத்திற்காக கலவரம் என்றும்,
தன்னைத் தானே தேவன் என்றும்,
கூவும் மாந்தர் மெய்யும் கேளும்!

மண் செழிக்க மழைத்துளி தரும்,
வான் என்னும் பகவான் பாரும்.
தேனி வாழ தேனைத் தரும்,
ஒரு நாள் தெய்வம் பூவும் பாரும்.
மரம் வளர உரமாய் மாறும்,
நரகல் கூடக் கடவுள் பாரும்!

சேய்க்காக பத்து மாதம் வாடும்,
தாய் என்னும் தெய்வம் பாரும்.
மெய்க் காக்க அன்னம் தரும்,
விவசாயி என்னும் சாமி பாரும்.
நோய் அண்டா அண்டம் தரும்,
ஆய் அள்ளும் ஆண்டவன் பாரும்!

தேவன் என்பவன் ஒருவன் அல்ல...
ஒவ்வொருவனும் தான்!
எழுத்து & எண்ணம்,
அருண் பாரதி சுவாமிநாதன்.

No comments:

Post a Comment

John Grisham’s “The Exchange”

John Grisham’s “The Exchange” touted to be a sequel to his previous blockbuster novel “The Firm” starts off as a legal thriller and later sh...