Thursday, 2 November 2023

கி.ராஜநாராயணனின் "கிடை"

"கிடை", கி.ரா அவர்களின் கரிசல் இலக்கிய படைப்புகளில் ஒன்று. இக்குறுநாவல் ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பயணிக்கிறது. 

ஆடுகளை காவல் காக்கும் முறையும், அதற்கு "கிடை"யில் கடைபிடிக்கப்படும் ஒழுங்கும் விவரிக்கப்படுகின்றன. அந்த "ஒழுங்கு" சமூகத்திலும் கடைபிடிக்கப்படுவதற்கு கிராமிய அமைப்பு சாதிய அடிப்படையில் நிறுவும் விதிகளையும், அவற்றை காப்பதற்கு ஆதிக்க சாதியினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனமும் தான் கதையின் கரு. 


எல்லப்பன்-செவனி இருவரின் காதல், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வினால் அடையும் முடிவை சமகால கிராமிய பிண்ணனியில் காட்சிப்படுத்துகிறது இந்நாவல். அந்த ஏற்றத்தாழ்வு சில சமயம் சாதிய அடிப்படையிலும், சில சமயம் பொருளாதார அடிப்படையிலும் அமைகிறது. முடிவில் எல்லப்பனின் வீட்டில் நடக்கும் படலமும், செவனியின் வீட்டில் நடக்கும் படலமும் சமூக முரணை பிரதிபலிக்கின்றன.

No comments:

Post a Comment

கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை"

கவிக்கோ அப்துல் ரகுமானின் "ஆலாபனை" சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலில் வரும் கவிதைகள் மனித இயல்பை பிரத...